- அரசு மேல்நிலைப்பள்ளி
- ச. நாசர்
- சட்டமன்ற உறுப்பினர்
- எஸ்.எம்
- ஆவாடி கழகம்
- பி.எம்.நாசர்
- நகர் அரசு உயர்நிலைப் பள்ளி
- உயர்நிலை பள்ளி
ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் எஸ்.எம். நகர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார். ஆவடி தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, திருமுல்லைவாயல் எஸ்.எம். நகர் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருவேற்காடு, அயனம்பக்கம் மேல்நிலைப்பள்ளி என 3 பள்ளி மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் சார்பில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டியை வழங்கினார்.
இதற்கு முன்னதாக, திருமுல்லைவாயல் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 11ம் வகுப்பு பயின்ற சுமார் 2 மாணவர்கள் மற்றும் மாணவிகள் என மொத்தம் 659 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஆவடி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், பகுதி செயலாளர்கள் பேபி சேகர், மண்டல குழு தலைவர் அமுதா பேபி சேகர், தலைமை ஆசிரியர் கலியபெருமாள் அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.